தங்கள் அனைவருக்கும் என் வணக்கம், எமது பெயர் தி.ப. சாந்தசீலன், எண். 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008 என்ற முகவரியில் வழிவழியாக வசித்து வருகிறேன். கடந்த 22 ஆண்டுகளாக அரசியல் சாராமல், சாதி, மதம் சாராமல் நாட்டுப்பணி ஆற்றுவது எமது வழக்கம்.
மது அருந்தாமையை கடைப்பிடிப்பது எமது வழக்கம். எமக்கு சுமார் முன்னூறு பனை மரங்கள் புதுவை மாநிலம், இலாசுப்பேட்டை, தாகூர் கலை கல்லூரி அருகிலுள்ள நாவற்குளம் சிற்றூரில் இருந்தது. அந்தப் பனை மரங்களில் 20 வருடங்களுக்கு முன்னால் மது இறக்கப்பட்டது. அதைத் தவிர்த்துப் பதநீர் இறக்கி இன்றைய நாள் வரை மது இறக்குவதைத் தவிர்த்து வருகிறேன்.
1. தாய் மொழி வளர வேண்டும்.
2. நமது மரபுவழி தாவரங்கள் வeர வேண்டும்.
3. நமது முன்னோர்கள் போலப் பத்து கல்லணை பாசன பகுதிகளை நாம் உருவாக்க வேண்டும்.
4. எளிய முறையில் சுலபமாக நாட்டு மக்களுக்கு கல்வி, மருந்துவம் நீதி கிடைக்க வேண்டும்.
5. பணம் உள்ளவர்களிடம் உள்ள சோம்பலும், ஏழைகளிடம் உள்ள வறுமையும் ஒழிய வேண்டும்.
6. தமிழுக்கும், காந்தியத்திற்கும் மட்டுமே மேற்கண்ட சிக்கல்களைத் தீர்க்கும் சக்தி உண்டு என்று நம்பி கடந்த 25 ஆண்டுகளாக எமது பணியை ஆற்றி வருகிறேன். நிற்க.
மதுவைப் பற்றியது
1. புறநானூறு பாடலில் அதியமானைப் பற்றி ஒளவைப் பிராட்டி கூறும் பொழுது, அதியமான் மரவகை மது அருந்தியதையும், ஒளவை பிராட்டி மது (கள்ளு) குடித்ததையும் கூறும் பாடல் இங்கே தருகிறோம்.
2. இரண்டாவதாக மூன்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் தென்னை மரத்தை, பனை மரத்தை, அத்தி மரத்தை, வேப்ப மரத்தைப் பற்றிய சித்தர்கள் எழுதிய விளக்கமான குரு பாரம்பரிய முறையில் கிடைத்த எமது நிகண்டிலிருந்து எடுத்து தரப்படுகிறது. இந்தக் குறிப்புகளைப் பற்றி தெளிய வேண்டுமெனில் - சித்த வைத்திய கல்லூரிகளை அணுகவும்.
மரவகை மதுவைப் பற்றி ஒளவைப் பிராட்டி
நமது அரசர்களும், நமது கவிஞர்களும், நம் தமிழ் சான்றோர்கள் பலர் வழக்கமாக மதுவை அருந்தியுள்ளார்கள். இதனால் உடலில் வெறித்தனமோ அல்லது குரோத தன்மையோ வராது. இதை மரத்தில் இருந்து எடுத்தவுடன் அருந்த வேண்டும். ஆனால் அரசாங்கமே இப்படி மது அருந்துவதை அனுமதிப்பதில்லை. அது புளிப்பேரி உடலைக் கெடுக்கும் தன்மை அடைந்த உடனே தான் அனுமதிக்கிறது.
நூலின் பெயர் : புறநானூறு
ஆதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றிய பாடல் பகுதி - ஒeவை பிராட்டி
தினை : பொதுவியல்
துறை : கையறுநிலை
""சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே !
பெரிகட் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே !
சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே !
பெருஞ்சோற்றாலும் நனி பல கலத்தன் மன்னே !
என்போடு தடிபடு வழியயல்லாம் எமக்கீயும் மன்னே !
அம்பொடு வேல்நுழை வழியயல்லாம் தான் நிற்கும் மன்னே !
இந்தப் பாடலில் உள்ள பொருள் :
ஒeவையார் அதியமானைப் பற்றி கூறியது அதாவது அதியமானுக்கு அதிக, கள் கிடைத்தாலும் குறைந்த அளவு கள் கிடைத்தாலும், எங்களுக்குக் கொடுத்துப் பகிர்ந்து தெரிந்து உண்பான் என்று கூறுகிறது. இதிலிருந்து ஒளவைப் பிராட்டி, அதியமான் உட்பட அனைத்துச் சான்றோர்கள் மரத்தின் கள் அருந்தியுள்ளார்கள் என்று தெரியலாம்.
பனை மரம் :வேறு பெயர்கள் : தாலம், கரும்புறும், ஏடகம், தாலி
பனம் பூ
பனையிலுறு பூவதுதான் பங்கமுறாக் குன்ம
வினையகற்றும் நீர்க்கட்டை மீட்கும் - முனையான
பன்னோய் ஒழிக்கும் பழஞ்சுரத்தைப் போக்கிவிடும்
மின்னே இதனை விளம்பு.
தீரும் நோய் : பூவை காயவைத்து கொலுத்தி வெள்ளை நிறம் வருமாறு சாம்பலாக்கி வைத்துக் கொண்டு ஏல அரிசியில் உண்ண வாதகுன்மம் போம். நீர்கட்டு உடையும், இதில் பல்துலக்க, பல் நோய் தீரும். புண்களைப் போக்கும்.
நுங்கு
நீர்வார் வியர்க்குருவை நீக்குமன லாக்குந்தோற்
சார்வா மயஞ்சீதந் தானொழிக்குஞ் - சேர்வார்
விழிக்கரையாந் துஞ்சிளக்கு மென்சுரத மானே!
கழிக்கரையாந் தாளியிளங் காய்.
இதன் நன்மைகள் : புனையின் கடுக்காய் ( முற்றிய நூங்கு) நுங்கை உண்ணக்கூடாது.
1. தோலுடன் இருக்கும் இளம் நுங்கை நான்கு, ஐந்து சாப்பிட சீதபேதி நின்றுவிடும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.
2. தோல் இல்லாமல் சாப்பிடும் இளம் நுங்கால் தேகம் மிகுந்த குளிர்ச்சி அடையும். விக்கல் நோய் குணப்படும். வாயு நீங்கும் நல்ல பசி உண்டாகும்.
3. நுங்கினில் உள்e நீர் வியர்க்குருவை போக்கும். அதாவது இந்த நீரை வியர்க்குருமேல் பூச வேண்டும்.
பனையின் மது
விந்துதிர மூறுமதி வெப்புடனே தாகம் போம்
பந்தமாந் தாதுவுமோ பாரிக்கும் - உந்துபித்தந்
தோன்றும்பா டாணங்கள் சுத்தியமாந் தோகைமின்னே !
என்ற பனைமது விற்கே.
இதன் பயன்கள் :
1. இதை இருபது நாட்கள் சாப்பிட்டு நிறுத்திவிட வேண்டும். பத்து நாள் இடைவெளியில் மீண்டும் அருந்தலாம்.
2. காலையில் இறக்கியவுடன் புதிய மதுவை பத்து அவுன்ஸ்க்கு மிகாமல் அருந்த வேண்டும்.
3. புளிப்பேறிய மதுவை அருந்தக்கூடாது. அருந்தினால் அறிவு கெடும். தேஜஸ் கெடும்.
4. ஆண், பெண் இரு பாலரின் இனவிருத்தி உறுப்புகள் மிகுந்த வலு பெறும் ( சுக்கீலம், •ரோணீதம் )
5. சொரி, சிரங்கு ஒழியும், பித்த நோய் போய் விடும். அழலை போகும். மேனி அழகுரும்.
பனங்கிழங்கு
நேர்ந்தவுட் சூடும் நிறைந்தபன் மேகமுடன் சேர்ந்தபல வீனஞ் •கமாகும் - ஒர்ந்து பலமறிந்து பே•ம் பனங்கிழங்கிற் குள்e நலமிதுவாம் நாட்டிற் பகர்.
1. பனங்கிழங்கு எளிதில் ஜீரணம் ஆகாது. அதனால் தேக திடத்திற்கு ஏற்றவாறு அeவறிந்து உண்ண வேண்டும். 2. கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி அத்துடன் உப்பு முதலியவை சேர்த்து பிட்டவியல் செய்து உண்ண வேண்டும். 3. இçeத்த தேகம் பருக்கும். பலகீனங்கள் போய் உடல் வலுபெரும். 4. சீதபேதி, இரத்தபேதியை போக்கும், மேகமும், கரபானும் போகும். தேகம் குளிரும், மேனி ஒளி பெறும் ( தேஜஸ் உண்டாகும்).
பனை வெல்லம்
வட்டுபன வெல்லத்தால் மார்பெரிச்சல் குன்மமறும்
முட்டுந் திரிதோம் முன்னிற்கா - கட்டுபடா
வாந்தி ருசியின்மை வாளா யுற்றிடினும்
சாந்தி பெருகுமென்றே சாற்று.
1. காப்பி, தேநீர் இவைகளில் சாதாரணமாகச் சர்க்கரைக்குப் பதிலாக இந்த பனவெல்லத்தைப் போட்டு சாப்பிட்டால் தேகத்தின் வெப்பத்தை அடக்கும். பித்தம் தனியும். இதனுடன் சுக்கு, நிலக்குமிழ் மிளகு ஆகிய மூன்றும் குடிநீர் செய்து குடித்து வந்தால் சுரம், மாந்தம், மேகம், சோவை போகும்.
பனை வெல்லக் குடிநீர்
வல்ல சுரம்பெரு மாந்தம்போந் தோசம்போஞ்,
சொல்லவெகு மேகம்போஞ் சோகைபோம் - நல்லாய்கேள்!
தாலவெல்லஞ் சுக்குடனே சற்றே நிலக்குமிழ்ங்
காலமே காய்ச்சியணக் கால்.
தென்னை மரம்
வேறு பெயர்கள் : பூலோக கற்பக விருட்சம், நாளிகேரம், தாழை
தென்ன பூ
மேகம் அகக்கொதிப்பு வீறுவி ரத்தபித்தம்
வேக அசிர்க்கரநோய் விழுபிரமி - தேகத்தில்
வின்னம் பாலிக்கும் விடபாகம் போகவென்றால்
தென்னம்பாளைப் பூவை தின்.
தீரும் நோய்கள் : பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும். வெறும்பாடு எனும் இரத்தப்போக்கு நோய் குணமாகும். மேலும், உட்காய்ச்சல், இரத்தபித்தம், விமாக நோய்கள் குணமாகும்.
உட்கொள்ளும் முறை : இளசான, தென்னை பூவில் மேல் உள்ள பாலையை நீக்கி உள்ளிருக்கும் பூவை பூண் இல்லாத உலக்கையால் நன்றாக இடித்து பிழிந்து எடுத்த சாற்றை அறை அவுன்ஸ் தினம் மூன்று வேளை சமன்சலத்தில் விலாவி அருந்த வேண்டும்.
தேங்காய்ப்பால்
வாதமாம் பித்தமுறும் வன்கரப்ப னும்படகுந்
தாதுமிகவிருத்தியாந் தாழ்குழலே - போதநல்ல
அன்ன மிறங்கு மதியுருசியுண்டாகுந்
தென்னைகாய்ப் பாலாற் றெளி.
உபயோகம் : இதை அதிக அளவாய் உட்கொண்டால் பேதி ஆகும். இதை இரவில் அருந்தினால் தூக்கம் வரும். மேலும் இதனால் சுத்த இரத்தம் உண்டாகும். சுக்கில விருத்தி உண்டாகும்.
தீரும் நோய்கள் : பித்தவாதம், பாரிச வாதம், மூலம் தேக அழற்சி இடுப்பு வலி, வாய் நாற்றம், வாய் வேற்காடு முதலியன நோய்கள் போகும்.
இளநீர்
பச்சிளநீர் மேகம் பழஞ்சுரங்க ளைப்போக்குங்
கச்சுமுலை மாதே கபமறுக்கு - மெத்த
வயிற்றிற் கிருமியயாடு வன்சொறிகண் நோய்யும்
அயர்த்தோடச் செய்யு மறி.
அருந்தும் முறை : அன்றே அறுவடை செய்த வழுக்கை உடைய புதிய இeநீராக இருக்க வேண்டும். சிறிது ஆகாரம் உண்டபின் இளநீரை அருந்துவது தான் சிறந்தது.
தீரும் நோய்கள் : வெப்பம் தனியும், பித்த தோம், கபா ஆதிக்கம் போகும். மனம் தெளிவு அடையும் நேத்திர துலக்கம் ( கண் ஒளி பெறும் ) தேகம் குளிரும், மூத்திர பெருக்கம், இலகுவாக, மலப்போக்கு உண்டாகும். பித்த தோங்கள் நீங்கும்.
மது (கள்)
நாதவிந் தூறு நளிர்பாண் டொடுசோவை
வாதபித் தங்கிராணி வன்கரப்பான் - பேதியிவை
பொங்கி யதிகரிக்கும் புத்திகெடு மேகமுண்டாந்
தெங்கின்மது விற்கென்றே செப்பு.
அருந்தும் முறை : சூரிய உதயத்திற்கு அறை நாழிக்கு முன்னதாக இறக்கப்பட்ட இனிப்புள்ள கள்ளில் சிறிது சீரகம், ஏலம், கற்கண்டு தூள் கூட்டி அருந்த வேண்டும். இது புளித்து போதையை உண்டாக்கும் பதத்தில் சாப்பிட்டால் புத்தியைக் கெடுக்கும். பல வியாதிகளை உண்டாக்கும். ஆகவே, முன்பு கூறியதுபோல சூரிய உதயத்திற்கு அரை நாழிக்கு முன்னதாக இறக்கப்பட்ட இனிப்புள்ள கள்ளை அருந்த வேண்டும்.
தீரும் நோய்கள் : இளைப்பைப் போக்கும், கவலை ஒழிக்கச் செய்யும், சிறிது மயக்கம் உண்டாகும். வயிற்று கடுப்பு தீரும். தேகம் பூரித்து கொழுமை பெறும், சூடு தனியும், •ரோணித, சக்கில பெருக்க முறும். நீர் தாரை வெப்பு அடக்கும்.
தேங்காய் நெய்
தேங்காயி னெய்யதனைற் றீயால் வருபுண்போம்
பாங்காகக் கூந்தல் படாந்தேறு - நீங்காத
பல்லடியின் ணேயும் படர்தா மரைசிரங்கு
அல்லறப் போமென் றறி.
தீரூம் நோய்கள் : இந்த எண்ணெய்யுடன் சுண்ணாம்பு நீருடன் கூட்டி விரலால் சிறிது நேரம் அடிக்க நெய் போல் கட்டி உறையும். அதை நெருப்புப்பட்ட புண்களுக்கு தடவி வர விரைவில் ஆறும். மேலும், சுண்ணாம்பு நீரைக் கலக்காத சாதாரண எண்ணெய் சிரங்கு, படர் தாமரையைப் போக்கும். இது பலவிதமான கூந்தல் தைலங்களில் சேரும், தலை மயிர் வeரும்.
வேம்பு
புந்தியிதைத் தீட்டுவிக்கும் புன்பிணையை யோட்டுவிக்கு
மிந்தியத்தை நன்றா யிசைவிக்கும் - சந்ததமம்
வீறுண்டாங் கற்ப மிகவுண்டா மெஞ்ஞான்றும்
மாறன்றா ரையமில்லா மல்.
பொதுப் பயன் : புத்தியைத் தெளிவிக்கும், கப பிணியை ஓட்டும் . வீரீயத்தை உண்டாக்கும். இது கற்ப மருந்தாகவும் இருக்கும். இதன் இலை, இதன் ஈர்க்கு, இதன் பூ, காய், பழம், வித்து, பட்டை, இதன் எண்ணெய், இதன் பிசின் முதலான அனைத்து பாகங்களும் நன்மை தரும். மிகுந்த மருத்துவ குணம் உடையது.
இதன் மதுவின் பயன் : பசியை தூண்டும், உடலுக்கு வன்மை தரும், மேக நோயை போக்கும், வாயு நோய்கள் ஒழியும், பழைய சுரம் போகும்.
குறிப்பு : வேப்ப மரத்தில் இருந்து மது எடுக்கும் முறையை உடனே தொடர வேண்டும். உடனே புதுபிக்க வேண்டும். உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையயன்றால் அடுத்த தலைமுறை இதைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் போய்விடும்.
அத்தி மரம்
வேறு பெயர்கள் : சுப்பிரதஷ்டம், அதம், உதும்பரம்.
அத்தியின் மது
அத்திமே கஞ்சூ டதிமயக்கந் தாகமும் போம்
அத்திமா வேரிலுண் டாமதுவில் - நித்தியமுஞ்
சீனியேனும் பேயன் செங்கனியே னுங்கலந்தே
பானுவுத யங்குடித்துப் பார்.
அத்தி மரம் பயன்கள் : அத்தி மர வேரை சீவி, அதனிலியிருந்து மது இறக்க வேண்டும். பூரா சர்க்கரையாவது, பேயன் வாழைக்கனியாவது கலந்து தினமும் சூரிய உதய காலத்தில் உண்ண வேண்டும். உட்சூடு, மூர்ச்சை, மேக வெட்டை, பித்த மயக்கம் அதிதாகம் போகும். நீர் வேட்கை, எலும்பைப் பற்றிய மேகம் போகும்.
அத்திப்பால்
நீரிழிவு போகும். பித்தம் போகும், அதிக நீர் போகுதல் நிற்கும், கீழ் பிடிப்பு போகும்.
அத்திப் பிஞ்சு
ஆனைக் கன்றி லொருபிடியும் அசுரன் விரோதி யிளம் பிஞ்சும்
கானக் குதிரைப் புறத்தோலுங் காலிற் பொடியை மாற்றினதும்
தானைத் தாய்கொல் சலத்துடனே தகவா எட்டொன் றாக்கொள் நீ
மானைப் பொருவும் விழியாளே வடுகுந் தமிழும் குணமாமே.
தீரும் நோய்கள் : பால் நிறைந்த அத்திப் பிஞ்சுடன், வேலம் பிஞ்சு, மாம்பட்டை, சிறு செறுப்படை இவைகளை ஒரு நிறையாகக் கொண்டு வாழைப்பூ சாற்றில், குடிநீர் இட்டு குடிக்க வயிற்று கடுப்பு, சீதபேதி, இரத்த பேதி முதலியன போக்கும்.
அத்திப்பழம்
இது குருதியை பெருக்கும், மலக்கட்டு போக்கும், சிறுநீரில் உள்e மதுவை நீக்கும், நாக்கு வறட்சி, உடல் வெதுப்பலை போக்கும். மேற்கண்ட சித்தர்கள் அருளிய மொழி வாக்குகளிலிருந்தும் ஒளவை பிராட்டி கூறியதிலிருந்து மரவகை மதுக்கள் மனித உடலுக்கு மிகுந்த நன்மை தரும். நம் பழந்தமிழ் நாட்டில் அரசர் முதல் சான்றோர்கள் வரை பொது மக்கள் உட்பட அனைவரும் மதுவை அருந்தி உள்ளார்கள் என்பதை நன்கு அறியலாம்.
மதுவை இறக்கியவுடன் புதியதாக அளவுவோடு அருந்த வேண்டும். மதுவை புதியதாக இறக்கியவுடன் அருந்தாமல் அது புளிப்பேறியவுடன் அதை நேரம் கடந்து காலம் தாழ்த்தி அருந்துவதால் அது புத்தியைக் கெடுத்து உடலையும் கெடுக்கும் தன்மை உடையதாக மாறிவிடுகிறது.
பெண்களுக்காகவும், பதவிக்காகவும் பொன், பொருளுக்காகவும் சண்டை போட்டுக்கொள்வது இன்று வரை மனிதன் இயல்பாக உள்eதுபோல் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மரவகை மதுவை (கள்ளு) வைத்துக் கொண்டு சூதாட்டம் ஆடுகிறோம். சண்டை போட்டுக் கொள்கிறோம். இது மனிதனின் மிகத் தாழ்ந்த குணத்தை வெளிப்படுத்துகிறது. கீழ்த்தரமான, மனிதாபிமானமற்ற செயல்களாகவும், மனிதன் வெளிப்படுத்துகிறான்.
ஆகவே, கீழ்க்கண்ட வகையில் மர வகை மதுவை மக்கள் பயன்படுத்த அரசுஅனுமதி அளிக்க வேண்டும். இதைப் படிக்கும் நீதித் துறையினர், மேன்மை தாங்கிய நீதிபதியினர் மரங்களிலிருந்து கிடைக்கும் மதுவகைகளை இந்தியாவிற்குப் பொருந்தாமல் தமிழ்நாட்டில் மட்டும் உணவு பொருளாகவே நடைமுறைப்படுத்த உத்திரவிட வேண்டும்.
தேனும் மதுதான். அளவுக்கு அதிகமாக அதை அருந்தினால் மயக்கம் வரும். மசாலா பொருட்களில் உபயோகப்படுத்தும் கசகசா போன்ற பொருளும் மயக்கம் தரக்கூடியவை. இவைகளை எல்லாம் நாம் நம் உணவு பொருளாகவே கருதுகிறோம்.
போதைப் பொருளாகக் கருதி ஒதுக்கி விடவில்லை. பொது மக்களில் பலர் தற்பொழுது வெகுவாக உணவு பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் சில பேர் நாற்பது, ஐம்பது வயதிலேயே மரணம் அடைகிறார்கள். இதனால் நாம் உணவு பொருளைத் தடை செய்ய முடியுமா? அல்லது கட்டுப்படுத்தத்தான் முடியுமா?
இதில் இரண்டுமே செய்ய முடியாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விசம், ஆனால் அமிர்தமான மரவகை மதுக்களை விசமாக்கி மக்களை உண்ணச் செய்து பழக்கப்படுத்துகிறோம். ஆகவே, மேலும் அத்தி மரம், வேப்ப மரம் மது எடுக்கும் முறையை ஒரு தலைமுறையினர் மறந்து விட்டார்கள். அல்லது மறக்க படுத்தப்பட்டுவிட்டார்கள். அறுபது வயதிற்கு மேற்பட்ட மரமேரிகளிடம் இருந்து நாம் சிரமப்பட்டு இந்த முறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இதே நிலை நீடித்தால் சிறிது காலத்தில் அத்தி மரத்திலிருந்தும், வேப்ப மரத்திலிருந்தும் எப்படி மது இறக்கலாம் என்ற கேள்வியே எழுந்துவிடும். ஆகவே, மரவகை மதுக்களை உணவு வகைகளில் சேர்க்க வேண்டுமே ஒழிய மது வகைகளில் சேர்க்கக் கூடாது. இதை அரசு ஆணையிட வேண்டும். நீதிமன்றம் உத்திரவாக அரசுக்கு ஆணையிட வேண்டும்.
அரசியல் அன்பர்களும், மக்கள் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இதை புரிந்து மரவகை மதுவை உணவாக அறிவிக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்தவும், பத்திரிகை அன்பர்களும் இது சம்பந்தமாக நன்கு தெரிந்து, புரிந்து, தெளிந்து பலவகைகளிலும் விவரம் அறிந்து தொடர்ந்து இதற்கு ஆதரவாக எழுதி இதை நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமாய் பேரன்போடு வேண்டுகிறோம்.
Monday, July 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 மறுமொழிகள்:
வாழ்த்துக்கள் சாந்தசீலன்.
நிறைய இயற்கை மருத்துவச் செய்திகளை அளித்துள்ளீர்கள்
தொடர்ட்டும் உங்கள் பணி!
Post a Comment