Tuesday, July 8, 2008

பழந்தமிழர் மற்றும் காந்தியடிகளார் கருதிய விடுதலை...

வளர்க வையகம்! வாழ்க தமிழ்!
பிறந்த நாடே சிறந்த கோயில்! பேசும் மொழியே தெய்வம் !

தற்போது தமிழ் மண்ணுக்கு இன்றியமையாமல் தேவைப்படும் விடுதலை!

காந்தியக் கொள்கையில் பற்றுள்ள எங்கள் அமைப்பு, தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்காகவும் பிரதிநிதிகளுக்காகவும் விடுக்கும் இந்த அன்பு வேண்டுகோளைத் தயவு கூர்ந்து முழுமையாகப் படிக்குமாறு வேண்டுகிறோம்.

இந்திய சுதந்திரத்திற்கு (1947) 13 ஆண்டுகளுக்கு முன் (1934) காந்தியடிகள், அடிப்படை காங்கிரசு உறுப்பினர் பதவியிலிருந்து விலகித் தன்னைக் கட்சி சாராப் பொதுமனிதனாக அறிவித்தார் (ஆதாரம் நூலின் பெயர் : இந்திய விடுதலைப் போர் வரலாற்றுச் சுருக்கம், வெளியீட்டாளர்கள் (1985) பூரம் பப்ளிகே­ன்ஸ் நெ.6, ஜம்புலிங்க நாயகர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-34, நூலாசிரியர்கள் எஸ்.ஏ. ரஹீம், ஏ.கோபண்ணா).

காந்தியடிகளின் முயற்சியால் நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் அவருடைய கொள்கையில் முன்னரே மாறுபட்டிருந்த காங்கிரசில் உள்ள பெரும்பான்மை யானவர்கள் துர்அதிர்ஷ்டவசமாக இந்தியாவை ஆட்சி செய்ய நேரிட்டது. அதன் காரணமாகவே இன்று நம்நாடு மோசமான அரசியல் சூழ் நிலையில் சிக்கி வறுமையிலிருந்து மீளமுடியா நிலையிலுள்ளது.காந்தியடிகளின் மறைவுக்குப்பின் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் அரும் பொருளான அவருடைய அரசியல் கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படாமல் விடப்பட்டன. நல்ல நோக்கமில்லாதவர்களால் சுய லாபத்திற்காக அவருடைய தெய்வீக கருத்துக்கள் மட்டும் பரப்பப்ட்டு வந்தன. ஆனால் அவருடைய தேசிய கருத்துக்கள் முற்றிலும் ஒதுக்கப்பட்டன.

அவற்றில் சில பின்வருமாறு:

1. மத்திய அரசாங்கத்தில் இருபது பேர் அமர்ந்து கொண்டு உண்மையான ஜனநாயகம் செயல்படுமாறு செய்ய முடியாது. அது அடித்தளத்திலிருந்து ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்த மக்களாலும் செயல்படுத்தப்பட வேண்டும்.கிராம சுயராஜ்யம், பக்கம் - 17 காந்தி இலக்கிய சங்கம், மதுரை.

2. இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்து விட்டது என்றாலும் இந்தியாவிலுள்e நகரங்கள், பட்டணங்கள் ஆகியவைகளுக்கு அப்பால்-இங்குள்e ஏழு இலட்சம் கிராமங்களின் சமூக, தார்மீக, பொருளாதார விடுதலையை நாம் அடைந்தாக வேண்டியிருக்கிறது.கிராம சுயராஜ்யம், பக்கம்-18 காந்தி இலக்கிய சங்கம், மதுரை.

3. நன்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு அரசில் அநியாயமான முறையில் பதவியையோ, சொத்தையோ கைப்பற்றிக் கொள்வது சாத்தியமில்லை. கிராம சுயராஜ்யம், பக்கம்-38. காந்தி இலக்கிய சங்கம், மதுரை.

4. இந்தியாவிலுள்ள கொடிய வறுமையையும் அதனால் ஏற்படக்கூடிய சோம்பேறித் தனத்தையும் தவிர்க்க முடியுமானால், மிகப்பெரிய இயந்திரங்களை உபயோகப் படுத்துவதையும் நான் வரவேற்பேன்.கிராம சுயராஜ்யம், பக்கம்-52. காந்தி இலக்கிய சங்கம், மதுரை, Young India, 22-11-1924,

5. ஏழையாக இருக்கும் இந்தியா சுதந்திரம் பெற முடியும் ஆனால் ஒழுக்கக்கேடான முறைகளின் மூலம் வeம் பெற்ற இந்தியா தனது •தந்திரத்தை மீண்டும் அடைவதென்பது மிகக் கடினமானதாகும்.கிராம சுயராஜ்யம், பக்கம்-60, Young India, 22-11-1926.

6. நகரங்களில் வாழ்வது எவ்வளவு சுகமாக இருக்கிறது என்று கருதுகிறார்க¼ளா அவ்வeவு சுகமாகக் கிராம வாழ்க்கையும் இருக்கிற மாதிரி இந்தியாவிலுள்e கிராமங்கçeப் புனருத்தாரணம் செய்வது எப்படி? உண்மையில் ஒவ்வொரு தேசபக்தனின் கடமையும் அது தான்.கிராம சுயராஜ்யம், பக்கம்-65 காந்தி இலக்கிய சங்கம், மதுரை.Harijan Daily 7-3-1936

7. உண்மையில் ஒரு நாட்டில் ஒழுங்கு நிலவுகிறது என்பதற்கான உரைகல், அதில் எத்தனைக் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல அந்நாட்டு மக்களிடையே பட்டினி இல்லாமல் இருக்கிறதா என்பது தான்.கிராம சுயராஜ்யம், பக்கம்-74

8. படித்தவர்களாகிய நாம் ஒரு வெளிநாட்டு மொழிமூலமாகவே நம்முடைய கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். இதனால் தான் பொது மக்கள் மத்தியில் எந்த விதமானபிரதிபலனையும் ஏற்படுத்த முடியவில்லை.கிராம சுயராஜ்யம், பக்கம்-103

9. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் நமது தாய்மொழி மூலம்கல்வி கற்றுக் கொண்டிருப்போமானால் நமக்கு மூத்தவர்களும் நமது வேலையாட்களும் நமது அண்டை அயலிலுள்eவர்களும் தமது அறிவினால் பலன் அடைந்திருப்பார்கள்.கிராம சுயராஜ்யம், பக்கம்-104

10. கல்வியின் எல்லாத்துறைகளுமே தாய்மொழியின் மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தால் அவை நம்முடைய வளத்தை வியப்பளிக்கக்கூடிய முறையில் உயர்த்தியிருக்கும் அநேகமாக இந்தியாவும் தனது தேவைகளுக்கு ஏற்ற ஒரு சுயாட்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும்.கிராம சுயராஜ்யம், பக்கம்-104

11. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்களும் கீழ்க்கண்ட காரியங்கçeச் செய்ய வேண்டும்.
அ. கிராமத்திலுள்ள ஆண், பெண் கல்விஆ. கிராமத் துப்புரவு இ. கிராம வைத்திய வசதி ஈ. கிராம பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைப்புக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல்.உ. ஆதி திராவிடர்களின் முன்னேற்றத்தையும் அவர்களுடைய அன்றாட தேவைகளையும் கவனித்தல் கிராம சுயராஜ்யம் பக்கம் 118 ,Young India, 28-05-1931.

12. சுதந்திரம் என்பது இந்திய மக்களின் சுதந்திரமாக இருக்க வேண்டும் இப்போது அவர்கள் மீது ஆட்சி நடத்துபவர்களுடைய சுதந்திரமாக இருக்கக் கூடாது.கிராம சுயராஜ்யம் பக்கம் 119, Harijan, 18-07-1949.

13. ஆங்கிலத்தின் மீது நமக்குள்e மயக்கம் நம்மை மாநில மொழிகளிடம் வி•வாசமற்றவர்களாக்கிவிட்டது இதற்கு ஒரு பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்பதற்காகவாகிலும் கிராம ஊழியர், கிராம வாசிகள் மத்தியில் தாய் மொழிப்பற்றை ஏற்படுத்த வேண்டும் அதே சமயம் இந்தியாவிலுள்e மற்ற எல்லா மொழிகள் மீதும் அவர் சமமான மதிப்பும் வைத்திருக்க வேண்டும்.கிராம சுயராஜ்யம் பக்கம் 311, Harijan 18-08-1940.

14. உடல் உழைப்பு நியதிக்குப் பணிவதானது சமுதாய அமைப்பில் ஒரு சத்தமில்லாத புரட்சியை ஏற்படுத்தி விடும் உயிர் வாழ்ப் போராடுவதற்குப் பதிலாக பரஸ்பரம் சேவை செய்வதற்கான போராட்டம் வரும் இதுவே மனிதன் அடையக் கூடிய வெற்றி, காட்டு மிராண்டிகளின் சட்டம் போய் மனிதனைப் பற்றிய சட்டம் அங்கு இடம் பெறும். கிராம சுயராஜ்யம் பக்கம், 90 Harijan,29-06-1935.

15. ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது என்பதற்கான முதல் உதாரணம் உடனடியாகவும் அதிக செலவின்றி மலிவாகவும் குற்றம் குறையற்ற நீதி கிடைக்க வேண்டும்.கிராம சுயராஜ்யம் பக்கம் -354.

மேற்சொன்ன கருத்துகளிலிருந்து காந்தியடிகள் நம் நாட்டை எவ்வாறு உருவாக்க வேண்டுமென்று விரும்பினார் என்பதை ஒருவாறு அறியலாம் அடிகளார் கூறிய கருத்துக்களை ஓரளவு நாம் அறியும் போது நம் ஒளவையார் கூறிய ( "நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றுமில்லை') (கொன்றை வேந்தன் பகுதி 49) என்கிற வார்த்தையின் சாரமே அடிகளாரின் கருத்துகளாகும் என்பது விளங்கும்!

ஆகவே தாய் மொழியில் தேர்ச்சி பெற்றுப் பழந்தமிழ் நூல்கçeக் கற்றறிந்து ஒழுகுவதும் காந்திய கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும் ஒன்றேயாகும். தமிழக முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்ட அனைவருக்கும் நாங்கள் அறிந்த காந்தியக் கருத்துக்களின் சாராம்சத்தைப் பின்வருமாறு தெரிக்கிறோம்.காந்தியடிகள் இந்தியாவின் சுதந்திரத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவருடைய மேலே குறிப்பிட்டுள்ள 1,2ஆவது கருத்துக்கள் மூலம் நன்கறியலாம்.

நம்நாட்டின் தேர்தல் முறைகள் சட்டதிட்டங்கள் யாவும் இங்கிலாந்து அரசால் ஒரு அடிமைப்படுத்தப்பட்ட நாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டவையேயாகும் அதே தேர்தல் முறை சட்டதிட்டங்கள் நம்நாட்டில் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லாமலாகிச் சுதந்திரம் என்பது காந்தியடிகள் மேலே 12ஆம்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல மக்களைஆட்சி செய்பவர்களுக்கே! மக்களுக்கில்லை என்பது போல் ஆகிவிட்டது.

மேலும் தற்பொழுது ஆட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு அரசு இயக்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு (புதுவையில் ச.ம.உ, தமிழகத்தில் 102 நகர சபை தலைவர்கள் மாநகராட்சி உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கிராம பஞ்சாயத்து பேரூராட்சி தலைவர்கள்)சுதந்திரம் இருப்பது உண்மை.

அவர்களால் எளிதாக அரசை அணுகி அரசு இயக்கத்தை, தங்களுடைய நியாயமான சுய தேவையை பூர்த்தி செய்து கொள்e பயன்படுத்திக் கொள்eலாம் என்பதும் உண்மை ஆனால் அவர்களுக்குத் தங்களுடைய மக்களுக்குச் சேவை செய்யப் போதுமான சுதந்திரமும் அதிகாரமும் சிறிதளவும் - கிடையாது என்பது யாவராலும் மறுக்க இயலாது என்பது தெளிவான உண்மை.

நம்நாட்டின் பாரம்பரியத்துக்கும் பண்பாட்டிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில் சட்ட திட்டங்களும் தேர்தல் முறையும் ஏற்படுத்தப்படாதவரையில் அதாவது மேலே குறிப்பிட்டுள்e தமிழ் மண்ணில் உள்ள மக்கள் பிரதி நிதிகளுக்குச் சிறந்த அலுவலகம் அமைத்து அதில் நவீன வசதி ஏற்படுத்தி, தாய் மொழியைத் தமிழ் மண்ணில் எல்லா இடங்களிலும் எல்லா விதங்களிலும் எல்லா வகைகளிலும் எல்லா அரசு இயக்கங்களிலும் நடைமுறைக்குக் கொண்டு வந்து மக்கள் பிரதிநிதிகளுக்கு நீதி வழங்கும் அதிகாரத்தையும் கொடுக்கவேண்டும்.

அவர்களைஅங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களாக மாற்றி நிர்வாக நிதி வசத்தையும் நிர்வாக அதிகார அமைப்பையும் அவர்களுக்கு மிகச்சுதந்திரமாக அளித்தால் நம் தமிழ் மண் வியப்பளிக்கும் வகையில் உலகத்துக்கு உதாரணமாக அமையும். இல்லையயன்றால் எவ்வளவு நல்லவர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டாலும், மக்கள் தலைவர்களும் நாட்டு நிலைமையைக் கருதி வருந்தினாலும், அந்த வருத்தத்தால் ஏற்படும் போராட்டங்களாலும், மறியல்களாலும், உண்ணாவிரதத்தாலும், எந்த மாறுதலும் எப்போதும் ஏற்படாது என்பது திண்ணம்.

பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற வeர்ந்த நாடுகளில் அந்நாட்டுக்குத் தகுந்தாற்போன்ற சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுத் தாய்மொழிக்கு மிக உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்eது. அதிகாரம் பரவல் மயமாக்கப்பட்டு எல்லாப் பஞ்சாயத்துக்களுக்கும் கல்வி, சுகாதாரம் குழந்தைநலம், வைத்திய வசதி, மின்விநியோகம் போன்றவற்றிற்குக் கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லாமல் எல்லாப் பஞ்சாயத்துக்களுக்கும் தேவையைக் கருதி, போதுமான நிதியும் அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இது சம்பந்தமாக டென்மார்க், ஜெர்மனி, ஆஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அரசுகளிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய குறிப்பேடுகளும், புத்தகங்களும் எங்களிடம் உள்ளன. அதைப்பெற விரும்பும் அன்பர்கள் எங்கள் முகவரிக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மேற்சொன்ன நாடுகளில் நீதித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மட்டுமே மத்திய அரசாங்கத்தால் கவனிக்கப்படுகிறது. மற்ற துறைகள் யாவும் சிறந்த தனியார் அமைப்புகளிடம் மிகச் சுதந்திரமாக ஒப்படைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளால் நேரடியாகக் கவனிக்கப்படுகின்றன.

அதிர்ஷ்டவசமாக நம் தமிழ் நாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்தில் பிரெஞ்சுகாரர்களால் மிகச் சுதந்திரமான மக்களாட்சி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன்னரே புதுவையில் 12 மேயர்கள் நியமிக்கப்பட்டு எல்லோருக்கும் சமமான நிதியும், அதிகாரமும் அளிக்கப் பட்டிருந்தன. இதனாலேயே புதுச்சேரியில் பிறப்பு, இறப்புப் பதிவுகள் பஞ்சாயத்து அலுவலகங்களில் இன்றளவும் யாவருக்கும் உண்டு.

தமிழகத்தின் நூற்றில் ஒரு பகுதி கூட இல்லாத புதுவையில் 12 மேயர்கள் இருக்கும் போது தமிழகத்தில் அப்போது 3 மேயர்கள் மட்டுமே இருந்தார்கள். இதைக் கொண்டே தமிழகம் ஒரு அடிமை நாடாகவே நடத்தப்பட்டது என்பதை நன்கறியலாம். ஆனால் துரதிஷ்டவசமாக புதுவையின் பழமையான தேர்தல் முறைகள் மறைக்கப்பட்டு, இதுவரை பஞ்சாயத்துகளுக்குத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. புதுவையில் 12 மேயர்கள் இருந்த இடத்தில் தற்போது 30 மேயர்களாவது ஆக்கப்பட வேண்டும்.

ஆனால் புதுவை அரசோ 12 மேயர்களை 5 மேயர்களாகக் குறைத்து விட்டது (காரைக்கால், மாஹே, யானம்) உட்பட்.தாய்மொழித் தமிழில் புதுவை அரசு செயல்படவேண்டும்.

தமிழ்நாட்டில் முற்றிலுமாகத் தாய்மொழியில் அரசாங்கம் செயல்பட வேண்டும். பிறமொழிக்காரர்கள் தன்னிச்சையாக, பள்ளிகள் ஆரம்பிக்கவும், அவர்கள் மொழிகçeக் கற்றறிந்து கொள்ள வேண்டிய உதவிகள் செய்வதும் அவசியம். தமிழ் நாட்டிலுள்ள பஞ்சாயத்துக்களுக்கும் நகரசபைகளுக்கும் மற்றும் புதுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (ச.ம.உ.) சிறந்த அலுவலகங்கள் அமைத்து நவீன வசதியை ஏற்படுத்தித் தருவது மிகமிக இன்றிமையாதது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள 102 நகரசபை தலைவர்களுக்கும் 6 மேயர்களுக்கும் புதுவை உள்ள 30 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிய குற்றங்களுக்கான நீதி வழங்கும் அதிகாரமும் சிறிய சிவில் நடைமுறை வழக்குகளைக் கவனிக்கும் அதிகாரங்களும் வளர்ந்த வெளிநாடுகளில் உள்ளது போல் நம் தமிழ் மண்ணிலும் வழங்கப்பட்டால் மக்களுக்கு உடனடியாக நீதி கிடைப்பதோடு எந்த குற்றமும் குறையும் இல்லாமல் நீதித்துறை மாறிவிடும்.

நீதி மன்றத்தில் தற்போது உள்ள தேங்கியுள்ள இ லட்சகணக்கான வழக்குகள் இல்லாமல் போகும் நாட்டின் நாணய மதிப்பு உயர்ந்து அரசியல் தூய்மை அடைந்து அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் இன்புற்று வாழ வழிப்பிறக்கும். எந்த அeவிற்கு தாய்மொழியை நாம் நடைமுறைக்குக் கொண்டு வருகிறோமோ அந்த அளவுக்கு இந்தத் திட்டங்கள் வெற்றி அளிக்கும் என்பது காந்தியடிகள் தெள்ளத் தெளிவாக மக்களுக்குக் கூறிய உண்மை (மேலே காந்திய கருத்துகளில் 8,9,10, பகுதிகள்).

தமிழ்நாட்டில் மேயர்களுக்கும், மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் அனைத்து நகரசபை உறுப்பினர்களுக்கும், புதுவை 30 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் அரசுஉயர் அதிகாரிகளுக்கும் (Gazetted Officer) எந்த அளவிற்கு ஊதியம் வழங்கப்படுகிறதோ அதே அளவிற்கு மேற்சொன்ன மக்கள் பிரதிநிதிக்கும் குறையாமல் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் போதிய நிதியும் அதிகாரமும் பரிபூரணமாக வழங்கப்பட வேண்டும். இதனால் அவர்கள் தாங்கள் ஏற்றுள்ள பதவியை ஒரு கௌரவமான தொழிலாகக் கருதி நேர்மையாகவும், உற்சாகமாகவும் உழைக்க வாய்ப்பு ஏற்படும்.வெளிநாடுகளைப் போல் நேர்மையில்லாதவர்கள் ஆட்சிக்கு வரநேரிட்டாலுங்கூட ஒழுக்கக்கேடான முறையில் நடப்பதும், அநியாயமான முறையில் பொருள் ஈட்டுவதும் இயலாமற்போகும்.

மக்கள் பிரதிநிதிகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு இயற்கையாகவே தள்ளப்படுவார்கள்.தமிழ் மண்ணும் நம் பாரம்பரியம் பண்பாடு, கலாச்சாரத்தோடு ஒழுகும். மொழியின் மீதும் தமிழ் மண்ணின் மீதும், வசிக்கும் இடத்தின் மீதும், மக்களுக்குப் பற்றுண்டாகிச் சாதி மதங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் இரண்டாம் பட்சமாக மாறிவிடும்.

எனவே தமிழ் மண்ணில் உள்e மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்திலும் தங்கள் கட்சி தலைமையகத்திலும் பின்வரும் காரியங்களை நிறைவேற்றுவதற்காக சத்திய வழியில் முயல வேண்டும்.

அவை பின்வருமாறு :

1. தாய் மொழி தமிழை எல்லா விதங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லா வகைகளிலும் நடைமுறைப்படுத்துவது.
2. மக்கள் பிரதிநிதிகளுக்கு சிறந்த அலுவலகம் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தி அவர்களுக்கு அதிகபட்ச ஊதியம் பெற்றுத் தருதல், நிதியும், நீதித்துறையும் நிர்வாக அதிகாரத்தையும் அவர்களின் நேரடி கையாளுகையில் கொண்டு வர வேண்டும்.
3. நாட்டின் நாணய மதிப்பை உயர்த்த வேண்டிய நடவடிக்கை எடுப்பது.மேற்சொன்ன காரியங்களை நிறைவேற்றுதலே தற்போது நாட்டிற்கும் வீட்டிற்கும் நாம் செய்யும் முதற் கடமையாகும்.

நம் முன்னோர்களின் நாடாலும் ஆற்றலை நினைத்து பின்பற்றினால் தமிழ் மண் மேன்மை அடையும் என்பதில் சிறிதளவும் ஐயம் தேவையில்லை அவற்றில் சில பின்வருமாறு.

1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்முறைகளில் அரசன்நாடு நல்கூர்ந் தன்று!நல்கூர்த்து பத்து, முதுமொழிக் காஞ்சி, பகுதி-9இ, பாடல் - 1.(முறை செய்யாத திட்டமிடப்படாத ஆட்சியாளர்களின் நாடு வறுமை அடையும்

2. நெடுமாட நீணகர்க கைத்திண்மை யின்னாஇன்னா நாற்பது பாடல் எண் - 36(பெரிய மாளிகையுடைய நகரத்தில் பொருள் இல்லாது இருத்தல் துன்பமாகும்.)

3. மன்று பறித்து உண்ணேல்ஒளவைப்பிராட்டி - ஆத்திச்சூடி பகுதி - 23(நீதி மன்றத்தில் உள்ளவர்கள் வழக்காடுபவரின் பணத்தைப் பறித்து வாழ்வது தவறு)

4. இன்மையின் இன்னாது உடைமைமுறை செய்யாமன்னவன் கோல்கீழ்ப் படின் திருக்குறள். அதிகாரம் 56, கொடுங்கோல் செய்யுள்-8.(திட்டமிடப்படாத அரசனுடைய ஆட்சியில் பொருள் இல்லாத வறுமை நிலையும் துன்பமானதாகும். செல்வ நிலையும் அதைவிட துன்மானதாகும்.

5. நாடெங்கும் வாழ கேடென்றுமில்லைஒeவையார் ஆத்திச்சூடி பகுதி - 49தாய்மொழி கல்வியையும் தமிழாட்சியையும் ஏற்படுத்தி தமிழ் மண்ணை வறுமையிலிருந்து நீக்குவோம்.

அன்புடன்
பொ.தி.ப. அறக்கட்டளை,22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008.

0 மறுமொழிகள்: