Tuesday, July 8, 2008

உருகும் மெழுகுகள்

மொழி வளர்வது, நீதி கிடைப்பது பற்றியது. இக்கடிதத்தை சமர்பிக்கும் எனதுபெயர் தி.ப. சாந்தசீலன், எம்மை காலை 9.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை, மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தொலைபேசியிலும்,நேரிலும் சந்திக்கலாம். எண்.22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008. என்ற விலாசத்தில் வழி, வழியாக யாம் வசித்து வருகிறோம்.

மது அருந்தாமை யோகாவை வளர்ப்பது, தமிழையும், தமிழிசையையும், மரபுவழி மரங்களையும் வளர்ப்பது எமது வழக்கம். காந்தியடிகள் 1933ஆம் ஆண்டே கட்சியிலிருந்து விலகி தன்னைக் கட்சி சாரா பொதுமனிதராக அறிவித்தார் என்பதையும் 1947ஆம் ஆண்டு நடந்த சுதந்திர வைபோகங்களில் கலந்து கொள்ளாதவர் என்பதையும் அறிந்தபின், உலகத்திற்கும், தமிழ் மண்ணுக்கும் தேவைப்படும் அவரது கருத்துக்களை மக்களிடையே பரப்புவதும் எமது வழக்கம்.

காந்தியடிகள் கூறினார் அப்பழுக்கற்ற ஜனநாயக நாட்டில் குற்றம் குறையற்ற நீதி அனைவருக்கும் சுலபமாக எளிதில் கிடைக்க வேண்டும். மேலும் அவர் தெளிவாக மக்களுக்கு விளக்கினார். கடந்த 50 வருடமாக நாம் நமது தாய்மொழியில் கல்வி கற்றிருப்போமேயானால் நமது அறிவினால் அண்டை அயலில் உள்eவர்கள் பயன் அடைந்து இருப்பார்கள், இந்தியாவும் தனது தேவைக்கேற்ற ஒரு சுய ஆட்சியை அனுபவித்துக்கொண்டிருக்கும். நம் நாட்டிலும் பலவிஞ்ஞானிகள் தோன்றி இருப்பார்கள். அவர்களது கண்டுபிடிப்பு நமது சொத்தாகி இருக்கும். கிராம பஞ்சாயத்துக்கள் விசே­ உயிருள்ள ஜீவனாகியிருக்கும். இந்த புனித பூமியில் திட்டமிட்டப் படுகொலைகள் நடக்காது இருந்து இருக்கும்.

பொதுவாக உருக்கமாக நாம் அறியவேண்டியது இது தான் அதாவது, தாய்மொழிக் கல்வி இல்லாததினால்தான் மனிதர்களுக்கு அறிவு குறைவு ஏற்பட்டுள்eது. ஆதலால்தான் மிகமிக மோசமான நிலையில் உள்ள நீதிக்கிடைக்காத சூழ்நிலையை எதிர்த்து அறப்போராட்டத்தில் கூட மக்கள் இறங்கவில்லை. இதனால் பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.

விரைவு நீதிமன்ற நீதிபதிகளாக பொதுமக்கள் பலர் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு நம் சமுதாயம் சூட்டும் பெயர் ரவுடி, குண்டர், பிஸ்தா, போன்றவை. திருக்குறளில் உள்ள குறள் அதாவது, ""அறம் ஈனும், இன்பமும் ஈனும் - திறனறிந்து பிறர் தீதின்றிவந்த பொருள்''இக்குறளின் பொருள் பிறரைக் கெடுக்காமல் உழைப்பின்மூலம் வரக்கூடிய செல்வம்தான் நன்மையைத் தரும் என்பதாகும்.

காந்தியடிகளும் நாணயமில்லாத செல்வம் நாட்டிற்கே ஆபத்தையே விçeவிக்கும் என்று கூறினார். கொலை, கொள்ளை குற்றங்களைத் தவிர இதர வழக்குகளுக்காக காவல் துறையையோ, நீதித்துறையையோ மக்கள் அணுகும்போது வெளிப்படையாகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுசம்மந்தமாக (மிகு விரைவு நீதிமன்ற நீதிபதிகள்) ரவுடி, குண்டர்களை அணுகுங்கள் எங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்குச் சென்றால் பத்துவருடங்களாக ஆனாலும் நீதிகிடைக்காது.

இந்த நாட்டில் என்று வெளிப்படையாக சொல்லிவிடுவது மிகுந்த வழக்கமாக உள்ளது. இது ஊர் அறிந்த ரகசியமாகவும் உள்eது.மேற்படி குண்டர்கள் இதுபோன்ற வழக்குகளைத் தீர்க்க முற்படும்போது அவர்களுக்கு உழைப்பில்லாத செல்வம் பிறரைக்கெடுத்து வரக்கூடிய செல்வம் சுலபமாக அதிக அளவில் சீக்கிரம் வந்து சேர்ந்துவிடுகிறது. காந்தியடிகளும், வள்ளுவரும் குறிப்பிட்டதுபோல இந்த செல்வம் அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் அழிக்கிறது. அவர்கள் மக்களுக்குச் செய்யும் நன்மை ஏராeம். பல குண்டர்களின் இல்லங்களின் சுப நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் நன்றி விசுவாசத்தோடு மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொள்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

தங்கள் வாழ்வை அழிய விடச்செய்து கொண்டே நூற்றுக்கு தொண்ணூற் றைந்து சதவிகித குண்டர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றுகிறார்கள். ஆகவே இவர்கள் உருகும் மெழுகுகள். இவர்களுக்கு அடுத்தப்படியாக இருப்பவர்கள் இவர்களைக் கண்காணிக்கும் காவல்துறையினர் இவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் அரசியல் தலைவர்கள் கடமை ஆற்றுதலில் முற்றிலும் வழிகாட்டுதல், இல்லாமை, தாங்கள் எடுத்துக்கொண்டவேலையில் உள்ள செயல்களைப் பாராமல் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல் கட்டுப்பாடின்மை போன்றவை இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இயற்கையாக வரும்.

ஆகவே இதுபோன்ற செயல் சூழலில் மீள முடியாமல் இவர்கள் உடலும், உள்ளமும் கெட்டு, குண்டர்கள் ஒரு மணிநேரத்தில் எரிந்து உருகுகிறார்கள் என்றால் இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள காவல் துறையில் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் இரண்டு மணிநேரத்தில் எரிந்து உருகுகிறார்கள்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக உள்ள அரசியல் தலைவர்கள் மூன்று மணி நேரத்தில் எரிந்து உருகுகிறார்கள். அதாவது வலுக்கட்டாயமாக சமுதாயத்தால் தீய சூழலில் ஈடுபடும் இவர்கeது வாழ்க்கை இவர்கள் ஏற்றுச்செய்யும் வேலையில் ஏற்படும் குற்றஅளவுகளுக்கு ஏற்ப இவர்களின் வாழ்வில் மிகுந்த தீமை ஏற்படுகிறது. இதுதான் எதார்த்தமான உண்மை.

இதற்கு தீர்வுதான் என்ன?
இதனுடைய தீர்வு எப்படி இருக்கவேண்டும் என்பதற்குமுன் நாட்டில் இதன் பிரதிபலிப்பு என்ன? வறுமையையும் அறியாமையையும் முதலீடாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் இவர்களின் இந்த நிலையால் அரசு இயந்திரங்களில் ஊடுருவியாய்ந்திருக்கும் இலஞ்சம், ஊழல், இதனால் நம் தமிழ்மண் உட்பட இந்தியா முழுவதுமே மீள முடியாத துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படி கூறுவதால் நாட்டில் நல்லவர்கள் இல்லை, நல்ல சக்தி இல்லை என்பது பொருளல்ல. நல்லவர்களும், நல்ல சக்திகளும் நடைமுறை நாட்டுநிர்வாகத்தில் வரமுடியாத சூழ்நிலை இருக்கிறது என்பது தான் பொருள்.

இதற்குத் தீர்வு தமிழ்மண்ணில் தமிழும் தெலுங்குமண்ணில் தெலுங்கும், அந்தந்த மாநிலத்திற்கு உரியமொழிகள் வளரவேண்டும். நீதி மிகவிரைவாக கிடைக்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இது சம்மந்தமாக ஆலோசனை செய்ய வேண்டும். இதற்கு தீர்வு காண வேண்டும். இதுதான் இதற்கு சிறந்த நிரந்தர தீர்வு.

இல்லையயன்றால் மனுநீதி சோழனும், பாண்டிய மன்னன், பாண்டிய நெடுஞ்செழியனும் வாழ்ந்து நீதிக்கு புகழ் பெற்ற நம் தமிழ்நாட்டில் உள்e அனைவரும் வெட்கத்தோடு, வேதனையோடு ஒருபொய்யான வாழ்க்கையை வாழநேரிடும், நேரிட்டுக்கொண்டும் இருக்கிறது. ""நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை"' என்ற ஒeவைப்பிராட்டியின் கருத்துகூர்ந்து நோக்கத்தக்கது. அதுமட்டுமல்ல திட்டமிடப்படாத அரசனுடைய ஆட்சியில் பொருளில்லாத வறுமை நிலையும், துன்பமானதாகும். செல்வ நிலையும் அதைவிட துன்பமானதாகும்.

"இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல் கீழ்ப்படின்'' என்ற திருக்குறளின்படி நம் தமிழ் மண்ணில் உள்ள அனைவரது வாழ்வும் துன்பநிலையையே உணர்த்திக்கொண்டு இருக்கும். எனவே தமிழை வeர்ப்போம், தரணியில் உயர்வோம். விரைவான நீதியை பெறுவோம், இன்பவாழ்வு வாழ்வோம்.

இந்தக் கடிதத்தை படிக்கும் அன்பர்கள், இதற்கு எழுத்து மூலமான பதிலை எமக்கு அனுப்பினால் உற்சாகமும், மகிழ்ச்சியும் உடையவனராவோம்.
நன்றி
அன்புடன் தி.ப. சாந்தசீலன்
குறிப்பு : இந்தக் கடிதம் எந்த நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி, விளம்பர சாதனங்களுக்கும் அனுப்பப்படுவதில்லை.

0 மறுமொழிகள்: