Thursday, July 10, 2008

ஏரிகள் பாதுகாப்பு பற்றிய என் எண்ணங்கள்...

உலகின் முன்னேறவேண்டிய நாடுகள் உணரவேண்டிய புதுவையின் நீராதாரம். புதுவையின் மொத்த பரப்பeவு 432 ச.கி.மீட்டரில் 83 ஏரிகள் இருப்பது இந்தியாவிலேயே புதுவையில்தான்.

கிராம பஞ்சாயத்துகள் புதுவை பிரஞ்சு ஆட்சிக் காலத்தில் உயிரோட்டமாக இருந்ததினால்தான் ஏரிகள் மேம்படுத்தப்பட்டன. செம்மைப்படுத்தப்பட்டன. அவை சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. இவ்வளவு குறைந்த பரப்பeவில் இவ்வளவு அதிகமான ஏரிகள் இருந்தும் கூட நம் அரசாங்கம் ஆட்சி, மக்கள் இந்த மூன்று இயக்கங்களும் செய்யும் தவறினால் புதுவையில் நிலத்தடி நீர் மாசுபட தொடங்கியிருக்கிறது. கடல் நீர் உள்ளே வர தொடங்கியிருக்கிறது.

கீழ்க்கண்ட காரியங்களை அதனால் புதுவை மாநிலத்தில் உடனே செய்ய வேண்டும்.

1. தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 15,72,273 பேர். மொத்தப் பரப்பளவு 4.59,054 ஹெக்டர். புதுவையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பரப்பளவில் புதுவையை விட பல மடங்கு தூத்துக்குடி மாவட்டம் அதிகம். கட்டடங்கள் குறைவு கடலோர மணற்பரப்பு அதிகம் புதுவையை விட மக்கள் நெருக்கம் குறைவு ஆனால் சுமார் கடற்கரையிலிருந்து 10 கி.மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் வெகுவாக நிலத்தடி நீரில் கலந்துள்ளது. வேளாண்மை செய்ய 30 அடிக்கு கீழ் உப்பு நீர்தான் கிடைக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் போதுமான நீர் நிலைகள் இல்லாதது தான். இதை மக்கள் பிரதிநிதிகள், அரசாங்கம் உணரவேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரிடமிருந்து எமக்கு வந்த கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்eது.

2. புதுவையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இல்லங்கள் அமைத்து அதில் சிறிய ஆழ்குழாய் அமைத்து சுத்தக் குடிநீரை பருகி இன்பமாய் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். சுமார் 65,00,000 மக்கள் வாழும் சென்னையில் புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் மக்கள் அங்கு வாழவே முடியாது என்ற மிகக் கொடூரமான, கேடுகெட்ட நிலமை உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு முக்கிய காரணம் என்ன ? சுமார் 1,600 சதுர கிலோ மீட்டர் உள்ள சென்னையில் ஏரிகளின் எண்ணிக்கை 5 முதல் 10 வரை இருக்கும். எமக்கு சரியாக புள்ளி விபரம் தெரியாது என்றாலும் சற்று ஏறக்குறைய நிலமை இதுதான்.

3. இந்த கருத்துக்களையெல்லாம் மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உணரவேண்டும். ""தண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் சிந்தும் தேசம்''. ""தண்ணீர் மாசுபட்டால் காசுயிருந்தும் பயனில்லை.'' எப்பேர்பட்ட முயற்சி செய்தாகிலும் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பைத் தடுப்போம் என்று பொதுமக்களுக்கு எழுதி வைத்திருக்கும் அரசுபல நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு அரசாங்கமே மூலகாரணமாகயிருக்கிறது. அதுவே ஆக்கிரமித்தும் உள்ளது. இன்று வரை புதுவையிலுள்ள90 சதவிகித ஏரிகளில் ஒன்று கூட சரிவர நிர்வாகம் செய்யப்படவில்லை. செப்பணிடப்படவில்லை. மேம்படுத்தப்படவில்லை.

4. இடம், பொருள், ஏவல், கூட்டுறவு, நட்பு, அனுபவம் என்ற தத்துவத்தின் கீழ் நம் முன்னோர்கள் மழைக்காலங்களில் நீரோட்டங்களை அறிந்தும். வெள்ளப்போக்கை அறிந்தும் மிக அருமையாக பல உன்னதமான ஏரிகளைஉருவாக்கினார்கள் பல குளங்களையும், குட்டைகளையும், தாங்கல்களையும், மடுவுகளையும் அற்புதமாக உருவாக்கியிருந்தார்கள்.

அதேபோல் நாமும் செயற்கைக்கோள் உதவியுடன், ஆகாயவிமான உதவியுடன், நவீன கேமராக்கள் உதவியுடன் மழைக்காலங்களில், வெள்ளக்காலங்களில் நீர்நிலைகளின் போக்கை அறிந்து எந்தெந்த இடங்களில் எல்லாம் புதிய நீர்நிலைகளை ஒரு சிலவற்றையாவது உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால்தான் தற்போது உள்ள நீர் நிலைகளை சிறந்த முறையில் நிர்வகித்து மேம்படுத்து ஆற்றல் நமக்கு உண்டாகும்.

5. தற்போது நாம் என்ன செய்கிறோம் என்றால் ஏரியை தூர் வார மட்டும் தெரிகிறது. எப்படி தூர் வார வேண்டும். எங்கு தூர் வார வேண்டும். எவ்வeவு ஆழத்தில் தூர் வார வேண்டும் அதில் மழைநீர் சேகரிப்பை எப்படி அமைக்க வேண்டும் என்பது தெரியவில்லை. நீர்வரத்து கால்வாய்களையும் ஒழுங்காக சீரமைக்கவும் தெரியவில்லை.

உதாரணமாக ஊசுட்டேரியில் நடக்கும் மிக மோசமான நிர்வாகப்பணிகளை இங்கே குறிப்பிடுகிறோம். சுமார் 15 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஊசுட்டேரியில் ஒழுங்காகத் துர்வாரப்படவில்லை ஊசுட்டேரி கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ள வெள்ளேரி, கடப்பேரி போன்றவைகளும் இது வரை செப்பனிடப்படவில்லை. ஊசுட்டேரியின் எல்லா மதகுகளும் நீர் ஒழுக்கு உடையவை இதுவரை நவீன திறப்பான்கள் பொருத்தப்படவேயில்லை. ஊசுட்டேரியில் தமிழகப்பகுதியில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. அதை தடுக்க இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊசுட்டேரி நீர் வரத்து கால்வாய்கள் மட்டம் பார்த்து தூர் வாரப்படுவதில்லை. ஒரு இடத்தில் உயரமாகவும் தூர் வாரப்படுகிறது. 63 ஏரிகள் இணைப்பு கொண்டது சங்கராபரணியாறு, மேல்மலையனூர் ஏரியிலிருந்து உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் மூலம் தான் ஊசுட்டேரி மற்ற ஏரிகளுக்குத் தண்ணீர் வருகிறது.

இந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் 60 வருடமாக அப்படியே இருக்கிறது. இது வரை அது உயரப்படுத்தப்படவில்லை. ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்eன. மழைக்காலங்களில் ஏரிக்கு அதிகப்படியான நீர் வரும்போது கூனிமுடக்குப் பகுதியில் கால்வாயில் தண்ணீர் வழிவதையும், காட்டேரிக்குப்பம் பகுதியில் கால்வாயில் ஆழத்தில் தண்ணீர் வருவதையும் இப்புகைப்படத்தில் நன்கு அறியலாம். இதன் மூலம் நீர்வரத்து வாய்கால் சரியான முறையில் தூர் வாரப்படவில்லை என்பதை நன்கு அறியலாம்.

இந்த ஒரு ஏரியிலேயே இவ்வளவு குறைபாடுகள் இருந்தால் மற்ற ஏரிகளில் எவ்வளவு குறைபாடுகள் இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இதை மக்கள் பிரதிநிதிகளும், அரசாங்கமும் நன்கு உணரவேண்டும்.

6. புதுவையில் எல்லா ஏரிகளையும் அளந்து அளவைக்கல் சுற்றிலும் நடவேண்டும். சிறிய குளங்கள், மடுவுகளைச் சுற்றி கருங்கல்லால் ஆன கரை கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். கழிவு நீர் நீர்நிலைகளில் கலக்காமல் கடல் வரை செல்ல பிரத்தியோக ஏற்பாடு செய்யவேண்டும்.

7. கிராம பஞ்சாயத்துக்களுடன் இணைந்து அரசு, ஆட்சியாளர்கள் செயல்பட்டால் தான் முழு வெற்றியுடன் நீர் நிலைகளை நிர்வகிக்க முடியும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். புதுவையில் நீர் நிலைகளை அழியாமல் பாதுகாத்து கொடுத்ததே கிராம பஞ்சாயத்துகள்தான். அந்த கிராம பஞ்சாயத்துக்களை நாம் உதாசினப்படுத்துகிறோம். அவர்களுக்கு அதிகாரம் கொடுக்க மறுக்கிறோம். கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் கொடுத்தால்தான் மக்கள் பிரதிநிதிகள், எம்.எல்.ஏ., மந்திரிகள். அரசாங்கம் முழு வெற்றியுடன் செயல்பட முடியும்.

இதற்கு உதாரணமாக அமெரிக்கா, பிரான்ஸ், நியூசிலாந்து, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆட்சி முறைகளை நாம் நன்கு அறிய வேண்டும். இப்போது கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் கொடுத்தால் எம்.எல்.ஏ., மந்திரிகள், அரசாங்கத்திற்கு அதிகாரம் குறைந்துவிடும் என்று முற்றிலும் தவறாக நினைக்கிறார்கள்.

8. 10 பேருக்கு குறையாத தூதுக்குழு ஒன்றை அனுப்பி நல்ல முறையில் ஏரிகளை நீர்நிலை நிர்வாகிக்கும், அமெரிக்கா, பின்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, உட்பட 10 நாடுகளுக்கு குறையாமல் அங்குள்ள நவீன நீர்நிலை நிர்வாகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உலகத்திற்கே முன் உதாரணமான கல்லணை நீர் நிர்வாகத்தைப் பற்றியும் புதுவை அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.

புதுவை அரசு பெரும்பாலான கடிதங்களை ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்கு ஆங்கிலத்திலேயே தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கிறது. இதை தமிழில் அனுப்ப ஏற்பாடு செய்தால் தான் கிராம பஞ்சாயத்துக்கள் உயிரோட்டமுள்ள ஒரு ஜீவனாக மாறும். நிற்க.

9. இந்தக் கடிதங்களில் உள்ள பல கருத்துக்கள் தமிழகப் பகுதிக்கு பொருந்தும். அதனால் தமிழக அரசுக்கும், தமிழக மக்கள் பிரதிநிதிகளுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது. எந்த பத்திரிக்கைகளுக்கோ, நாளிதழ்களுக்கோ இது அனுப்பப்படுவதில்லை.
அன்புடன் தி.ப.சாந்தசீலன் 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008.






இணைப்பு :
அனுப்புநர் : பெறுநர் திரு.எஸ். தர்மலிங்கம், எம்.ஏ.,
புள்ளி இயல் உதவி இயக்குநர் ( முகூபொ ) , தூத்துக்குடி மாவட்டம்.

கடித எண் : 621 / அ2 / 2007 - 1 நாள் : 27.09.2007 ஐயா, பொருள் : தகவல் உரிமைச் சட்டம் விவரங்கள் கேட்பது தொடர்பாக பார்வை : 1. தங்களது மனு நாள் இல்லை. 2. மாவட்ட ஆட்சி தலைவர் தூத்துக்குடி கடிதஎண் : ஓ.மு.எல் 01/71700/2007 நாள் : 14.09.2007 தங்களது மனுவில் கோரியுள்ள விவரங்களில் இவ்வலுவலகத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கான 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்களைக் கீழ்க்கண்டுள்ளவாறு தெரிவித்துக் கொள்கிறேன். மொத்த மக்கள் தொகை - 1572273 இதில் ஆண்கள் - 766823, பெண்கள் - 805450 மொத்த பரப்பளவு - 459054 ஹெக்டேர். மேலும் தங்களது விண்ணப்பத்தில் கோரியுள்ள இதர விவரங்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.புள்ளி இயல் உதவி இயக்குநர் ( முகூபொ)தூத்துக்குடிநகல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாeர் ( பொது )தூத்துக்குடி.

வளர்க வையகம் ! வாழ்க தமிழ் !!
"பிறந்த நாடே சிறந்த கோயில்! பேசும் மொழியே தெய்வம்''

0 மறுமொழிகள்: